டெல்லி: ஈரானுக்கு 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பூடான், வங்கதேசம், நேபாளம், மாலத்தீவுகள், இலங்கை, ஆப்கானிஸ்தான், மோரீஷஸ், மியான்மா், செஷல்ஸ் ஆகிய நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்யப்போவதாக மத்திய அரசு அறிவித்து இருந்தது.

இது தவிர பல நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந் நிலையில் ஈரான் நாட்டிற்கு மத்திய அரசின் சார்பில் மொத்தம் 5 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே 1.5 லட்சம் தடுப்பூசிகள் ஈரானுக்கு வழங்கப்பட்டுள்ளன. எஞ்சிய 3.5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் அடுத்த வாரம் ஈரானை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது