பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா இன்று கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.

நாடு முழுவதும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் இயக்கம் ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. இப்போது 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

இந்த இயக்கத்தின் தொடக்க நாளில், பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந் நிலையில், இன்று கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.

பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட அவர், தகுதி வாய்ந்த அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.