பாக்தாத்,

முன்னாள் அதிபர் மகமத் அகமதினிஜாத்
முன்னாள் அதிபர் மகமத் அகமதினிஜாத்

ரான் அரசு தலைமை வழக்கறிஞருக்கு 135 சவுக்கடி தண்டனை கொடுக்க அந்நாட்டு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

 
ஈரான் நாட்டின்  முன்னாள் தலைமை அரசு வழக்கறிஞர் சயித் மோர்டாஸாவி. இவர்மீது மோசடி செய்ததாகவும் பொது நிதியை வீணடித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. விசாரணையில், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் ஊர்ஜிதமான தால்,  அவருக்கு 135 சவுக்கடிகள் தண்டனை வழங்கத் தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளதாக   ஈரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஈரான்   மகமத் அகமதினிஜாத்தின்  நண்பராக இருந்தவர்  சயித் மோர்டாஸாவி, 2012 ஆம் ஆண்டு ஈரானின் நலத்திட்டப் பொறுப்பாளாராக நியமிக்கப்பட்டார். அப்போது பொதுநிதி வீணடித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர் தெக்ரான் எவின் சிறைசாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் தலைமை அரசு வழக்கறிஞர்  சயித் மோர்டாஸாவி
முன்னாள் தலைமை அரசு வழக்கறிஞர் சயித் மோர்டாஸாவி

ஆறு வருட காலம் தலைமை அரசு வழக்கறிஞராக அவர் இருந்த சமயத்தில், டஜன் கணக்கான சீர்திருத்த பத்திரிகைகளை மூடியதற்காகவும் மற்றும் பத்திரிக்கை யாளர்களை சிறையில் அடைத்ததற்காகவும், ஈரானிய சீர்திருத்தவாதிகள் மத்தியில் வெறுப்பை பெற்றிருந்தார்.
அவர் வழக்கறிஞராக இருந்த சமயத்தில், மனித உரிமை மீறல் குற்றங்கள் புரிந்ததாகவும் அவர்மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.