டெல்லி: செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 10 வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

செப்டம்பர் 19ம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்கி நவம்பர் 10ம் தேதியுடன் முடியும் என்று ஐபிஎல் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது. மும்பை ஐபிஎல் நிர்வாகக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி போட்டிகள் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது

தொடரின் இறுதிப்போட்டி நவ.10 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஐபிஎல் தொடருக்கான அனைத்து விளம்பரதாரர்களுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. குறிப்பாக சீன நிறுவனங்களையும் ஐபிஎல் நிர்வாக குழு அனுமதித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.