டெல்லி: ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால், வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும் ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா ஓரளவிற்கு கட்டுக்குள் வர, போட்டியை நடத்தலாம் என்று அந்நாட்டு அரசு தெரிவித்தது.
ஐபிஎல் போட்டியை இலங்கையில் நடத்த இலங்கை அரசும் விருப்பம் தெரிவித்தது. இந்நிலையில் தற்போது ஐ.பி.எல். நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
துபாய், அபுதாபி, ஷார்ஜா நகரங்களில் போட்டிகளை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் போட்டி அட்டவணை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.