மும்பை:
செப்டம்பரில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறும் என பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடந்து வந்த 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தையும் (பயோ பபுள்) மீறி 4 அணியை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கடந்த 4-ந்தேதி இந்த போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 29 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இன்னும் 31 ஆட்டங்கள் எஞ்சி இருக்கின்றன.

எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், செப்டம்பரில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறும் என பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தகவல் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.