புனே:

ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும் இடையே புனேயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து ஐதராபாத் அணி பேட்டிங் செய்தது. ஐதராபாத் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.