டில்லி

டில்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு செப்டம்பர் 12 வரை இடைக்கால ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியத் தலைநகர் டில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். டில்லி அமைச்சரவையில் சத்யேநிதிர ஜெயின் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து வந்தார்.

கடந்த அண்டு மே மாதம் இவர் சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கில்  அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட இவர் அப்போது இருந்து டில்லி திகார் சிறையில் உள்ளார். உடல் நிலை காரணமாக சத்யேந்திர ஜெயின் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார்.

அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.  இன்றுடன் அவரது இடைக்கால ஜாமீன் இன்றுடன் முடிவடைந்த நிலையில் வழக்கு உச்சந்நீதிமன்ற நீதிபதி பி.கே.மிஸ்ரா முன்பு விசாரணைக்கு வந்தது.

நீதிபது உடல்நிலை காரணமாக சத்யேந்திர ஜெயினின் இடைக்கால ஜாமீனை செப்டம்பர் 12-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.