சென்னை:
சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் காமராஜ் உடல்நலம் குறித்து முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நேரில் நலம் விசாரித்தனர்.

அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்று காரணமாக கடந்த 5ம் தேதியன்று, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக 7ஆம் தேதி மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் மேல் சிகிச்சைக்காக, ஆம்புலன்ஸில் அடுத்த சில நிமிடங்களில் எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அமைச்சர் காமராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்த தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர்.