டில்லி

ர்க்கண்ட் முன்னாள்  முதல்வர் ஹேமந்த் சோரன் கைதை கண்டித்து இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநிலங்களவையில் வெளிநடப்பு செய்துள்ளனர்.

நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தினார்.குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடைபெற்றது.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கை குறித்து இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது, இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக அவர்கள் குரல் எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர். பிரியங்கா சதுர்வேதி

‘சம்பாய் சோரன் பதவிப் பிரமாணம் செய்ய ஏன் இவ்வளவு நேரம் ஆனது. ஆளுநர் அலுவலகத்தை மத்திய அரசு எப்படி தவறாக பயன்படுத்தியது என்பதை இது காட்டுகிறது’

என்று கூறினார்.

திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்.சவுகதா ராய்

“எதிர்க்கட்சி தலைவர்களை என்ன காரணத்துக்காக அமலாக்கத்துறை சோதனை செய்து கைது செய்கிறது. இதுவரை அமலாக்கத்துறையால் எதையும் நிரூபிக்க முடியவில்லை. மத்திய அரசு தாங்கள் ஆட்சி செய்யாத மாநிலங்களில் உள்ள தலைவர்களை வேட்டையாட முயல்கிறது. இவை அனைத்தும் எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும்”

எனக் கூறினார்.