சென்னை

சிறிய, குறும் மற்றும் நடுத்தர தொழில் கடன் விதிகள் எளிமையககபடுள்ளதாக தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

டாய்கோ வங்கி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் பணிகளைச் செய்து வருகிறது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக எந்த நோக்கத்திற்காக இந்த வங்கி தொடங்கப்பட்டதோ அந்த நோக்கத்தை மாற்றி அந்த வங்கியில் உள்ள பணத்தினை நகைக்கடன் வழங்குவது, வீட்டுமனை கடனுக்கு வழங்கப்பட்டு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படாத நிலை இருந்ததனால் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன

இந்நிலையில் எந்த நோக்கத்திற்காக டாய்கோ வங்கி தொடங்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேற வேண்டும் என்று முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்றதிற்குப் பிறகு  கிட்டத்தட்ட 75% நிதியை தொழில் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

நிலங்களின் மதிப்பு சிப்காட் பகுதியில் ஒரு ஆண்டுக்கு 12% உயர்த்திட வேண்டும் எனக் கடந்த ஆட்சியில் உத்தரவிட்டு இன்று நில மதிப்புகள் பலமடங்கு உயர்ந்து யாரும் வாங்க முடியாத சூழல் இருந்தது.  இதைச் சரி செய்யும் விதமாக முதல்வர், நிலமதிப்பினை சுமார் 60% அளவிற்குக் குறைத்துப் பல நிறுவனங்கள் தொழில் தொடங்க வாய்ப்பினை உருவாக்கியுள்ளார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு, “தொழில் கடன் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்றவாறு வழங்கப்படுகிறது. அதாவது அதிகபட்சமாக 30 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. சிறு, குறு நிறுவனங்கள் எளிமையாகத் தொழில் தொடங்க முதலீட்டு மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பத்திரப்பதிவு செலவுகள் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளன.

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு விரைவாகக் கடன் வழங்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார். வங்கி நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தினார்.  அதன்படி வங்கி நிறுவனங்கள் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு எளிய முறையில் கடன் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.