டில்லி

ந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகெங்கும் கொரோனா  பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   ஒமிக்ரான் பரவல் உலகெங்கும் அதிகரிப்பதால் கொரோனா அடுத்த அலை  பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.   இந்த கொரொனா பாதிப்பால் இந்தியாவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு தற்போது சற்று குறைந்து வருகிறது.

இன்றைய காலை நிலவரப்படி இந்தியாவில் 4.03 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 4.91 லட்சம் பேர் உயிரிழந்து 3.76 கோடி பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 22.02 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.  தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டு இது வரை 163.84  பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் மூன்றாம் அலை கொரோனாவில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் ஒருவர் ஆவார்.   இதை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.  மேலும் தம்முடன் தொடர்பில் இருந்த அனைவரையும் முன்னெச்சரிக்கையாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டு கொண்டுள்ளார்.