டெல்லி: டிஜிட்டல் கரன்சியை பணமாக மாற்றிக்கொள்ளலாம் என்று  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இன்று பாஜக சார்பில் நடைபெற்ற சுயசார்பு பொருளாதார கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, டிஜிட்டல் கரன்சியை பணமாக மாற்றிக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில்,  கிரிப்டோ கரன்சிக்கு மாற்றாக இந்திய அரசே டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த இருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறினார். ஆனால், கிரிப்டோ கரன்சிக்கு 30 சதவிகித வரியை அறிவித்துள்ளதுடன்,  கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தவர்களின் நிலை  குறித்த எவ்வித தகவலும் பட்ஜெட் உரையில் அறிவிக்கவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகளும் இதுகுறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று கூறிய நிதியமைச்சர்,  பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில்  இந்த கரன்சி அமைய இருப்பதாகவும்,  டிஜிட்டல் கரன்சி மூலம் இணைய பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட உள்ள இந்த டிஜிட்டல் கரன்சி, நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய உந்துசக்தியாக அமையும் என்றும்  மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற சுயசார்பு பொருளாதார கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, ரிசர்வ் வங்கி,. டிஜிட்டல் கரன்சியின் தொடக்கமானது டிஜிட்டல் பணம் செலுத்துதல் மற்றும் ஆன்லைன் நிதி பரிமாற்றம் ஆகியவற்றை மிகவும் பாதுகாப்பானதாகவும் ஆபத்து இல்லாததாகவும் மாற்றும் என நம்பிக்கை தெரிவித்தார்.

டிஜிட்டல் நாணயமானது வரும் ஆண்டில் டிஜிட்டல் பொருளாதாரத்தை உயர்த்தும் என்று கூறிய பிரதமர் மோடி, ரிசர்வ் வங்கியின் ஆதரவுடன் செயல்படும் CBDC, மத்திய வங்கியால் கட்டுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்றும், இந்தியாவின் ஃபியட் கரன்சியின் டிஜிட்டல் அவதாரமாக இருக்கும் என்றும் கூறினார்.

மேலும், “டிஜிட்டல் கரன்சி என்பது நமது தாள் வடிவிலான ரூபாயின் டிஜிட்டல் வடிவமாக இருக்கும். அத்துடன் ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படும். ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் நாணயமானது சட்டப்பூர்வ டெண்டராக இருக்கும், இது இயற்பியல் நாணயத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாக இருக்கும் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

மக்கள் டிஜிட்டல் கரன்சியை இயற்பியல் பணமாக மாற்ற முடியும் என்றும், இது இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தும் என்று;k.  இது டிஜிட்டல் கரன்சியுடன் தற்போதுள்ள கரன்சியை பரிமாற்றம் செய்யும் ஒரு அமைப்பாகவும் இருக்கும். மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி  (சிபிடிசி) டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும். யாராவது டிஜிட்டல் கரன்சியில் பணம் செலுத்தினால், அதை பணமாக மாற்றிக்கொள்ள முடியும் என்றும் விளக்கம் அளித்தார்.

சிபிடிசி-யின் தொடக்கமானது டிஜிட்டல் பணம் செலுத்துதல் மற்றும் ஆன்லைன் நிதி பரிமாற்றம் ஆகியவற்றை மிகவும் பாதுகாப்பானதாகவும் ஆபத்து இல்லாததாக வும் மாற்றும். மேலும், இது உலகளாவிய டிஜிட்டல் பணம் செலுத்தும் முறைகளின் வளர்ச்சியை எளிதாக்கும்.

டிஜிட்டல் கரன்சி புதிய வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், நிதி தொழில்நுட்பத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும். பணத்தை கையாளுதல், அச்சிடுதல், மேலாண்மை ஆகியவற்றில் சுமையை குறைக்கும்/