டில்லி

ந்தியப் பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடன் தொலைபேசியில் உரையாடி உள்ளார்.

சென்ற ஆண்டு இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பு ஏற்றார். ரிஷி சுனக் பதவி ஏற்புக்கு ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் அதற்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். அப்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

மேலும் மேற்கு ஆசியாவில் நடைபெறும் மோதல் குறித்தும் பேசிய தலைவர்கள், பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மை ஏற்படுவதன் முக்கியத்துவம் குறித்தும் சுட்டிக்காட்டினர்.  இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போரால் அப்பாவி மக்கள் பலியாவது குறித்தும் இருதலைவர்களும் தங்கள் கவலையை வெளிப்படுத்தினர்.

பிரதமர் மோடி  தனது எக்ஸ் தளத்தில்,

“நான் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் பேசி இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்தோம். மேலும் மேற்கு ஆசியாவில் உள்ள நிலைமை குறித்து எங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ஃபு வன்முறை மற்றும் பயங்கரவாதத்திற்கு இடம் இல்லை என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

வன்முறையில் அப்பாவி மக்கள் உயிர் பறிபோவது மிகுந்த கவலைக்குரிய ஒன்றாகும். ,நாங்கள் பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மை, பாதுகாப்பு தொடர்பாக பணியாற்ற வேண்டிய அவசியம் குறித்தும் பேசினோம்”

என்று பதிவிட்டுள்ளார்..