டெல்லி:  இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கும்  தமிழகத்தை பூர்விகமாக கொண்ட சஞ்சனா கணேசன் என்பவரும் நேற்று விமரிசையாக திருமணம் நடைபெற்றது. அவர்களின் திருமண புகைப்படங்களை பும்ராஷ் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார், இது வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் வேகப்பந்து  பந்துவீச்சாளர் பும்ரா. இவருக்கும் தமிழகத்தை பூர்விகமாக கொண்டு, தற்போது புனேவில் வசித்து வரும, கணேசன் ராமசாமி  என்பவரின்  மகளும், ஸ்டார் ஸ்போர்ட் தொலைக்காட்சி தொகுப்பாளினியான சஞ்சனா கணேசசனுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. விமரிசையாகவும், அதே வேளையில் வெளி நபர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல், கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுடன் சுமார் 50க்கும் குறைவான குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிலையில், திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

கோவாவில் அவர்களது திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இவர்களது திருமண உடைகளை பிரபல ஆடம்பர திருமண வடிவமைப்பாளர் தேவிகா நரேன் என்பவரால் வடிவமைக்கப்பட்டதாகவும்,  விருது பெற்ற புகைப்படக் கலைஞர் ஜோசப் ராதிக் அந்தந்த ஆடைகளில் பிரமிக்க வைக்கும் தம்பதியினரின் சரியான திருமண புகைப்படங்களை எடுத்தார் என்றும் கூறப்படுகிறது.

பும்ரா, சஞ்சனா திருமணம் தொடர்பாக  சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில்  பல்வேறு தகவல்கள் கசிந்த நிலையில், அதுகுறித்து பும்ரா வாய் திறக்காமல் மவுனம் காத்து வந்தார். அதுபோல, சமீபத்தில் நடைபெற்றது இந்தியா, இங்கிலாந்து இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பும்ரா கடைசிப் போட்டியில் களமிறங்கவில்லை. மேலும், தற்போது நடைபெற்றுவரும் டி20 தொடரிலும் அவரின் பெயர் இடம்பெறவில்லை.

தனிப்பட்ட காரணங்களுக்காக பும்ரா விடுப்பில் சென்றுள்ளதாக கூறப்பட்டு வந்தது. ஆனால், அவர் திருமணத்திற்காக சென்றுள்ளார் என்பது குறித்து யாரும் சந்தேகிக்காத நிலையில், அவரது திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்தின் முதல் படம் ஜாஸ்பர்ட் பும்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இனறு  பகிரப்பட்டது.  இந்த புகைப்படங்கள் பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் உள்பட ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர். இதனால் பும்ராவின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.