கதூர், அரியானா

ந்திய தேசிய லோக் தள் கட்சித் தலைவர் நபே சிங் அரியானாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அரியானா மாநிலத்தில் உள்ள பகதூர் என்ற இடத்தில் இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நபே சிங்  காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் அவரது கட்சி நிர்வாகி ஜெய்கிஷன் என்பவரும் உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த துப்பாக்கிச் சூடு நிலத்தகராறு காரணமாக நடைபெற்று இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. மர்ம கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் அரசியல் கட்சித் தலைவர் பலியாகியிருப்பது அரியானாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.