சென்ன‍ை: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், பிரமாதமாக பேட்டிங் செய்து வருகிறது இங்கிலாந்து அணி.

அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட், இரட்டை சதத்தை நெருங்கி வருகிறார். பென் ஸ்டோக்ஸ் 82 ரன்களை எடுத்து அவுட்டானார். முன்னதாக, டாம் சிப்ளி 87 ரன்களை எடுத்து அவுட்டானார்.

தற்போதைய நிலையில், இரண்டாம் நாளின் இரண்டாவது செஷன் ஆட்டம் நடந்துவரும் நிலையில், இந்திய அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 440 ரன்களை எடுத்து ஆடிவருகிறது. நிலைமை இப்படியே நீடித்தால், இன்றைக்குள் இங்கிலாந்து அணி 600 ரன்களைக் கடந்து, இந்தியாவுக்கு கடுமையான சவாலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் அட்டகாசம் செய்த இந்தியா, சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் திணறி வருவது குறிப்பிடத்தக்கது. பலரும், சேப்பாக்கம் மைதானம் மிகவும் மட்டமான முறையில் தயார் செய்யப்பட்டுள்ளது என்று விமர்சிக்கின்றனர்.