செஞ்சூரியன்:

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2:0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

முன்னதாக பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணி 9 விக்கெட்களை இழந்து 118 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இந்திய அணி 20.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தென் ஆப்ரிக்காவில் இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெறுவது இது 2வது முறையாகும். 2011ம் ஆண்டு ஜோகன்ஸ்பெர்க் மற்றும் கேப் டவுனில் நடந்த போட்டிகளில் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.