ஜெனிவா

னடாவில் வழிபாட்டுத் தலங்கள் மீது நடக்கும் தாக்குதலை தடுக்க வேண்டும் என அந்நாட்டு அரசை இந்தியா வலியுறுத்தி உள்ளது.

ஜெனிவாவில் ஐ.நா. சபை மனித உரிமைகள் ஆணையத்தின் மதிப்பாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இந்தியா, வங்காளதேசம், இலங்கை உள்ளிட்ட ஐ.நா. உறுப்பு நாடுகள் கலந்து கொண்டு பல்வேறு பரிந்துரைகளை வழங்கின.

இந்தியத் தூதர் முகமது ஹுசைன், கனடாவில் ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் பேச்சு சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வன்முறை மற்றும் பயங்கரவாதத்தைத் தூண்டும் இயக்கங்களின் நடவடிக்கைகளைக் கனடா அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் சிறுபான்மையினர் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கவும், வெறுப்பு பேச்சுகள் மற்றும் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் கனடா அரசு அரசியலமைப்பைப் பலப்படுத்த வேண்டும் எனவும் முகமது ஹுசைன் வலியுறுத்தினார்.