புனே: இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில், கோப்பையை வெல்வதற்கு 330 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

இந்தப் போட்டியில், இந்திய அணி 50 ஓவர்களுக்குள்ளாகவே ஆட்டமிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எப்படியும், இந்தியா 350 ரன்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷர்துல் தாகுரும், குருணால் பாண்ட்யாவும் ஆட்டமிழந்தவுடன், அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது.

இத்தொடரில், இந்திய அணி முதன்முறையாக 50 ஓவர்களுக்குள் ஆட்டமிழந்துள்ளது. டெய்லெண்டர்கள் சரியாக ஆடவில்லை. இதனால், 48.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 329 ரன்கள் மட்டுமே எடுத்தது இந்திய அணி.

இங்கிலாந்து தரப்பில், மார்க் வுட் 3 விக்கெட்டுகளும், அடில் ரஷித் 2 விக்கெட்டுகளும், சாம் கர்ரன், டாப்லே, ஸ்டோக்ஸ், மொயின் அலி மற்றும் லிவிங்ஸ்டோன் தலா 1 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

சில கேட்சுகளை இங்கிலாந்து தவறவிட்டாலும், வேறுசில கடினமான கேட்சுகளை அந்த அணி பிடித்து, விக்கெட்டுகளைக் கைப்பற்றியது.