சென்னை: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்களை எடுத்துள்ளது.

சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் இந்தியா – மேற்கிந்திய தீவுகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, இந்தியாவை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் சோபிக்கவில்லை. ரோகித் ஷர்மா 56 பந்துகளை சந்தித்து 36 ரன்கள் மட்டுமே அடித்தார். ராகுல் 15 பந்துகளில் 6 ரன்களும், விராத் கோலி 4 பந்துகளில் 4 ரன்களும் அடித்தனர்.

பின்னர் ஷ்ரேயாஸும் ரிஷப் பண்ட்டும் அணியை மீட்டெடுத்தனர். ஷ்ரேயாஸ் 88 பந்துகளை செலவழித்து 70 ரன்களும், ரிஷப் 69 பந்துகளில் 71 ரன்களும் அடித்தனர்.

கேதார் ஜாதவ் 40 ரன்களும், ஜடேஜா 21 ரன்களும் அடித்தனர். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் மட்டுமே குவித்தது. சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி ஏமாற்றினார்.