சென்னை: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனா தொற்று காரணமாக,  6,148 பேர் உயிரிந்துள்ளதுடன், புதியதாக 94,052 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  இந்தியாவில் இதுவரை இல்லாத கடந்த 24 மணி நேரத்தில் 6,148 பேர் உயிரிழந்துள்ளனர்.,

நாடு முழுவதும்  கடந்த 24 மணி நேரத்தில் 94,052 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2,91,83,121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 2 ஆயிரம் அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 6,148 பேர்  உயிரிழந்துள்ளனர். இது இதுவரை இல்லாத அளவில் அதிக உயிரிழப்பு. இதுவரை  3,59,676 பேர் கொரோனாவால்  உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,51,367 பேர் குணமடைந்துள்ளனர். பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட குணமடைந்ததோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,76,55,493 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக  11,67,952 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை 23,90,58,360 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.