டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த 2மாதங்களுக்கு பிறகு 1லட்சத்திற்கும் கீழ் குறைந்ததுள்ளது. இதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக இந்தியாவில் படிப்படியாக குறைந்து வருகிறது. 63 நாட்களுக்கு பிறகு ஒருநாள் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் கீழ் குறைந்தது.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 86,498 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆரம்ப கட்டத்தில் தினசரி பாதிப்பு 3 லட்சத்தை கடந்த நிலையில், படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 1.14 லட்சம், நேற்று 1 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று ஒரு லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,89,09,975லிருந்து 2,89,96,473 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13,03,702 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,22,82 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 2,71,59,180லிருந்து 2,73,41,462 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை விகிதம் 93.94%
நேற்று ஒரே நாளில் 2123 பேர் மரணமடைந்துள்ளனர். இனால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3,51,309 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.21% ஆக உள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 23,61,98,726 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.