டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ளது. 88 நாட்களுக்கு பிறகு, கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 53,56 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், தொற்றில் இருந்து  78,190 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலையின் வேகம் குறைந்து வருகிறது. தொடக்க நாட்களில் தினசரி பாதிப்பு 3 லட்சத்தை கடந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு 50 ஆயிரம் அளவுக்கு குறைந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணிநேரத்தில் 53 ஆயிரத்து 256 பேருக்கு புதியதாக  கொரோனா பாதிப்புக்கு கண்டறியப்பட்டு உள்ளது.. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 99 லட்சத்து 35 ஆயிரத்து 221 ஆக உயர்வடைந்து உள்ளது.

நேற்று ஒரேந ளில்  1,422 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,88,185 ஆக உயர்ந்து உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 78 ஆயிரத்து 190 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 88 லட்சத்து 44 ஆயிரத்து 199 ஆக உயர்வடைந்து உள்ளது.  குணமடைவோர் விகிதம் 95.26 சதவீதமாக உள்ளது.

தற்போதைய நிலையில்,  நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 7,02,887 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 28, 00,36. 898 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.