டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,951 பேருக்கு கொரோனா பாதிப்பும்., 817 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம்  இன்று காலை வெளியிட்டுள் ளதகவலின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 45,951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,03,62,848 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று  ஒரே நாளில் 817 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,98,454 ஆக உயர்ந்துள்ளது.

அதே வேளையில் குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 60,729 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை  குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,94,27,330 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில்  தற்போது 5,37,064 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

COVID19 தடுப்பூசி நிலவரம் (30 ஜூன், 2021, காலை 8.00 மணி வரை)  இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் மொத்த எண்ணிக்கை: 33,28,54,527  கடந்த 24 மணி நேரத்தில் செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை: 36,51,983