டெல்லி:  இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 41,383 பேருக்கு கொரோனா பாதிப்பு, 507 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு 30 ஆயிரம் இருந்த நிலையில், கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி,  கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதியதாக மேலும் 41,383 பேர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,12,57,720 ஆக உள்ளது. கடந்த 2 நாட்களாக பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்,  நேற்றைய பாதிப்பை விட 632 குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா  இறப்பு எண்ணிக்கை 507 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,18,987 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 38,652 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,04,29,339 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக  4,09,394 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 41,78,51,151 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 22,77,679 பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.