டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,875 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில், சிகிச்சை பலனின்றி 369 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், (காலை 8 மணி நிலவரம்)  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37 ஆயிரத்து 875 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.  இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 3,30,96,718  ஆக அதிகரித்துள்ளது.

தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று ஒரே நாளில் 369  பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை  4,41,411 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 39,114 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,22,64,051 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 3,91,256  பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 70,75,43,018 (70 கோடியை தாண்டியது)  பேருக்கு  கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 78,47,625  பேருக்கு தடுப்பூசி செலுததப்பட்டு உள்ளது.