டெல்லி: நாடு முழுவதும கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 31,382 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதேவளையில்  32,542 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி 318 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ( 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில்,) வெளியிட்டுள்ள தகவலின்படி, கொரோனாபாதிப்பு 3.35 கோடியையும்,உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.46 லட்சத்தை தாண்டி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 31,382 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,35,94,803 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மேலும் புதிதாக 318 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,46,368  ஆக உயர்ந்தது. இதனால் உயிரிழந்தோர் விகிதம் 1.33% ஆக  உள்ளது

கடந்த 24 மணி நேரத்தில்,  32,542 பேர் கொரோனா சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,28,48,273 ஆக உயர்ந்துள்ளது. இதனால் குணமடைவோர்  விகிதம் 97.78% ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில், நாடு முழுவதும்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,00,162  பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.89% ஆக உள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரு நாள் மட்டும் 72,20,642 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 84,15,18,026 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

 

[youtube-feed feed=1]