டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதியதாக மேலும் 38,887 பேருக்கு கொரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டு இருப்பதுடன், 422 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில், 3வது அலை பரவத்தொடங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு சான்றாக கேரளா மற்றும் டெல்லியில் தொற்று அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30549 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 3,17,26,507 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 422 பேர் உயிரிழந்துள்ளதுடன், இதுவரை மொத்த உயிரிழப்பு 4,25,195 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 38,887 பேர் குணமடைந்துள்ளதுடன், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,08,96,354 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் நாடு முழுவதும் 4,04,958 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நாடு முழுவதும் இதுவரை 47,85,44,114 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் 61,09,587 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.