டெல்லி:  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 26,727 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி  277 பேர் உயிரிழந்துள்ளனர். 28,246 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அதேவேளையில் இதுவரை 89 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

து மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில்  புதிதாக  மேலும் 26,727 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர்.  இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,37,66,707 ஆக உயர்ந்தது.

நேற்று மேலும்  277 பேர் கொரோனாவால்  இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,48,339 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.33% ஆக உள்ளது

கடந்த 24 மணி நேரத்தில்  28,246 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம்  குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,30,43,144 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 97.85% ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் தற்போதைய நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,75,224 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.82% ஆக குறைந்துள்ளது.

 

இந்தியாவில் நேற்று  மட்டும் 64,40,451 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 89,02,08,007 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.