டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,404 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேவேளையில், 37,127 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். சிகிச்சை பலனின்றி , 339 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,32,89,579 ஆக உயர்நதுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 339 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,43,213 ஆக உயர்ந்தது.

நேற்று ஒரே நாளில் தொற்றில் இருந்து ஒரே நாளில் 37,127 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம்  குணமடைந்தோர் மொத்த  எண்ணிக்கை 3,24,84,159ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் நாடு முழுவதும  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,62,207பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் இதுவரை 75,22,38,324 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 78,66,950 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.