டில்லி

ந்தியாவில் நேற்று 14,30,891 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,410 அதிகரித்து மொத்தம் 3,32,88,021 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 340 அதிகரித்து மொத்தம் 4,43,247 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 39,811 பேர் குணமாகி  இதுவரை 3,24,76,647 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,55,226 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் அலை கொரோனா பரவலில் இந்தியாவில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வந்ததால் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டன.   கொரோனாவுக்கு இன்னும் சரியான சிகிச்சை முறை கண்டறியப்படாததால் கொரோனா பரிசோதனைகள் அவசியம் ஆகி உள்ளன.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 14,30,8941 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  இதுவரை மொத்தம் 54,44,44,967 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  தமிழகத்தில் நேற்று 1,53,854 மாதிரிகள் சோதிக்கப்பட்டு இதுவரை 4,43,74,784 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.