Skip to content
  • Wed. Jul 8th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா

எல்லையில் பிங்கர் 4 மலைப்பகுதியை மீண்டும் கைப்பற்றியது இந்திய ராணுவம்…

Sep 11, 2020

லடாக்: எல்லையில் சீன ராணுவ நிலைகளுக்கு அருகே உள்ள பிங்கர் 4 மலைப்பகுதியை இந்திய ராணுவம்  மீண்டும் கைப்பற்றி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா சீனா இடையே எல்லைப்பகுதியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது.  பதற்றத்தை தணிக்கும் விதமாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள், பாதுகாப்பு மந்திரிகள் மட்டம் உள்பட பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடை பெற்று வருகிறது. இருந்தாலும், சீன ராணுவம்,  அங்கிருந்து விலக மறுத்து வருவதால், பதற்றம் தொடர்ந்து வருகிறது.

லடாக்கின் லே-யில் உள்ள பாங்காங் ஏரி பகுதியில் சீன ராணுவ துருப்புகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இரு நாட்டு எல்லைகளுக்கும் முக்கிய இடமாக உள்ள  இந்த பகுதியில் இரு நாடுகளும் படைகளை குவித்து வருவது பதற்றத்தை மேலும் கூட்டியுள்ளது.

இந்த பரபரப்புக்கு இடையே கடந்த வாரம், எல்லைப்பகுதியான அருணாசலபிரதேசத்தில், எல்லைப்பகுதியில்  உள்ள கிராமத்தில் வேட்டைக்கு சென்ற 5 பேரை சீன ராணுவம் கடத்தி சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனால், எல்லைப்பகுதி மக்கள், தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு மாற்று இடத்துக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில்,  லடாக்கின் லே-யில் உள்ள பாங்காங் ஏரி பகுதியில் பல்வேறு நிலைகள் உள்ளன. அதன்படி பிங்கர் 1 முதல் பிங்கர் 14 வரை பல்வேறு நிலைகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. பாங்காங் ஏரியின் தெற்கு கரையோரத்தில் சீன வீரர்களின் பிங்கர் 4 (விரல் 4) நிலை அமைந்துள்ளது.

கடந்த ஏப்ரல்-மே மாதங்களில், இந்த பகுதிகளில் சீன படையினர்  அத்துமீறி இந்த பகுதியை ஆக்கிரமித்து, நுழைந்துள்ளனர்.   தனது நிலைகளை அமைத்துள்ளனர்.  அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என இந்திய  ராணுவம் வலியுறுத்தி வந்த நிலையில், அதை சீன ராணுவம் கண்டுகொள்ளவில்லை. அதை விட உயரமான பகுதியை இந்திய ராணுவம் கைப்பற்றி  சீன ராணுவத்துக்கு செக் வைத்துள்ளது.

 இந்தியா கைப்பற்றியுள்ள மலைத்தொடர் சீன ராணுவ நிலைகளுக்கு மிக அருகிலும், உயரமாகவும் உள்ளது. இதன் மூலம் சீன ராணுவத்தின் நடவடிக்கையை கண்காணிக்க முடியும் என்றும்,  , தற்போது பிங்கர் 4 பகுதியின் மிகவும் உயரமான மலைத்தொடர் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது.
இதன் காரணமாக, எல்லை பகுதியில் இந்தியா-சீனா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

Post navigation

உருளைக்கிழங்கு பயிரிடுவதற்காக உருவாகியுள்ள நவீன இயந்திரம்!
கொரோனாவுக்கு டெக்ஸாமெதாசோன் தடுப்பூசி ஓரளவு பலனளித்துள்ளது! உலக சுகாதார நிறுவனம்

Related Post

இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

இந்தியா

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை தொடர்பாக பீகார் மற்றும் உ.பி.யில் 3 பேர் கைது

இந்தியா

மே 9-ல் மேற்கு வங்கம், மே 12-ம் தேதி அசாம் மாநிலங்களில் பாஜக அமைச்சரவை பதவியேற்பு விழா:

உலகம்

இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar
உலகம்

300 பாதுகாவலர்கள் 30000 கோடி ரூபாய் பட்ஜெட்… டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பிற்காக தினசரி செலவு எவ்வளவு ?

April 27, 2026 Sundar
உலகம்

தொடர் கொலை முயற்சிகள்… உயிர் தப்பிய தருணங்கள் : பல தாக்குதல்களை மீறி வந்த டிரம்ப்…

April 26, 2026 Sundar
உலகம்

மோசே மர்மத்தைத் தீர்க்க உதவும் விவிலிய காலத்து சிலை எகிப்தில் கண்டுபிடிப்பு

April 24, 2026 Sundar
இந்தியா உலகம்

ஈரானுக்கு செல்ல வேண்டாம்! இந்திய மக்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்..!

April 24, 2026 A.T.S Pandian

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer