அகமதாபாத்: இங்கிலாந்திற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 34 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

51 பந்துகளில் 11 ரன்களை மட்டுமே எடுத்த ஷப்மன் கில் ஆர்ச்சர் பந்தில் ஆட்டமிழந்தார். பிறகு, களமிறங்கிய புஜாரா 4 பந்துகளை மட்டுமே சந்தித்த நிலையில், ஜேக் லீச் பந்தில் டக்அவுட் ஆனார்.

தற்போது, கேப்டன் விராத் கோலி களமிறங்கியுள்ளார். துவக்க வீரர் ரோகித் ஷர்மா 42 பந்துகளில் 23 ரன்களை எடுத்து ஆடிவருகிறார்.

இன்றைய ஆட்டநேரம் முடியும்வரை, இந்திய அணி மேலும் விக்கெட்டுகளை இழக்காமல் இருந்தால், நாளைய ஆட்டத்தை நம்பிக்கையுடன் தொடங்கி, இங்கிலாந்தைவிட அதிக ரன்கள் முன்னிலை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.