டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 62,808 ஆக உயர்ந்து 2101 பேர் மரணம் அடைந்துள்ளனர்

நேற்று இந்தியாவில் 2894 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  மொத்த எண்ணிக்கை 62,808 ஆக உள்ளது.  நேற்று 115 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 2101 ஆகி உள்ளது.  நேற்று 1414 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 19,301 ஆகி உள்ளது.  தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 41,402 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 1165 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,228 ஆகி உள்ளது  நேற்று 48 பேர் உயிர் இழந்து மொத்தம் 779 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 330 பேர் குணமடைந்து மொத்தம் 3800 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 394 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,797 ஆகி உள்ளது  இதில் நேற்று 23 பேர் உயிர் இழந்து மொத்தம் 472 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 239 பேர் குணமடைந்து மொத்தம் 2091 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 224  பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,542 ஆகி உள்ளது  இதில் மொத்தம் 68 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 50 பேர் குணமடைந்து மொத்தம் 2070 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 526 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,5235 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 44 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 219  பேர் குணமடைந்து மொத்தம் 1824 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று 129 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,708 ஆகி உள்ளது  இதில் நேற்று 3 பேர் உயிர் இழந்து மொத்தம் 106 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 181 பேர் குணமடைந்து மொத்தம் 2162 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.