புதிய குடியுரிமை சட்டம் குறித்த தெளிவான சிந்தனை இல்லாமல் தெளிவில்லாமல் சர்தவேசத மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் பேசுவதாக இந்திய உள்துறை அமைச்சகம் வேதனை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இந்தியர் அல்லாத பிற நாட்டினை சேர்ந்த 6 மதத்தவருக்கு குடியுரிமை வழங்கும் புதிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு, 311 எம்.பிக்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. இம்மசோதாவுக்கு எதிர்கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டாலும், தேசிய அளவில் ஆதரவும், எதிர்ப்பும் கலந்தே காணப்படுகிறது.

இம்மசோதா குறித்து கருத்து தெரிவித்திருந்த சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம், “இந்திய குடியுரிமை சட்டம் முற்றிலும் தவறானதாக உள்ளது. மதத்தை பொருட்படுத்தாமல் அனைவரும் சமம் என்கிற இந்திய அரசியலமைப்புக்கு முற்றிலும் மாறாக புதிய சட்ட திருத்தம் ஒன்றை இந்திய அரசு கொண்டுவந்துள்ளது’ என தெரிவித்திருந்தது.

அமெரிக்காவின் இக்கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்திய உள்துறை அமைச்சகம், “குடியுரிமை சட்டம் இந்தியாவை விட்டு யாரையும் வெளியே அனுப்பாது. குடியுரிமை சட்டம் மற்ற நாட்டிலிருந்து வந்தவர்களுக்கு பாதுகாப்பை அளிக்கக் கூடியது. இதை மதரீதியான சிந்தனை என குறை சொல்லக்கூடாது.அமெரிக்க ஆணையம் எங்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பது புதிதான ஒன்று அல்ல. இந்த சட்டம் குறித்த தெளிவான சிந்தனை இல்லாமல் பேசுவது  வேதனையளிக்கிறது” என்று பதிலளித்துள்ளது.