டெல்லி: ஆகஸ்டு மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.86 லட்சம் கோடி என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது. இது கடந்த ஜூலை மாத ஜிஎஸ்டி வசூலைவிட குறைவு.
ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா ரூ.1.86 லட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரியை வசூலித்துள்ளது, இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 6.5% அதிகமாகும் என்று அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. முந்தைய மாதத்தில், இந்தியாவின் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாக இருந்ததாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.
இதுதொடா்பாக ஜிஎஸ்டி வலைதளத்தில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, கடந்த ஆகஸ்டில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,86,315 கோடி. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாயான ரூ.1,74,962 கோடியுடன் ஒப்பிடுகையில் 6.5% அதிகம்.
ஆனால் நிகழாண்டு ஜூலை மாதம் வசூலான ரூ.1.96 லட்சம் கோடி ஜிஎஸ்டியுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.
கடந்த ஆகஸ்டில் மொத்த உள்நாட்டு வருவாய் ரூ.1.37 லட்சம் கோடியாக 9.6 சதவீதம் அதிகரித்தது. இறக்குமதி மூலம் பெறப்படும் வரி 1.2 சதவீதம் சரிந்து ரூ.49,354 கோடி வசூலானது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், நிகழாண்டு ஆகஸ்டில் ஜிஎஸ்டி ரீஃபண்ட் ரூ.19,359 கோடியாக 20 சதவீதம் சரிந்தது.
இந்த ஆண்டு ஆகஸ்டில் நிகர ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.67 லட்சம் கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 10.7 சதவீதம் அதிகம் என்றும் தெரிவித்துள்ளது.