சார்ஜா

சார்ஜாவில் நடைபெற்ற பார்வை அற்றோருக்கான உலகக் கோப்பை கிரிக்கிட்டில் இந்தியா பாக் அணியை வென்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

சார்ஜாவில் பார்வை அற்றோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது.    அதில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியும், இந்திய அணியும் மோதின.    விருவிருப்பாக நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணியை வென்று உலகக் கோப்பையை கைப்பற்றி உள்ளது.

பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 8 விக்கட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்திருந்தது.    அதன பின் ஆட்டத்தை துவக்கிய இந்திய அணி 8 விக்கட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்தியா தொடர்ந்து இரண்டாம் முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத் தக்கது.