காபூல்:

காபூல் ஓட்டலில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இறந்தவர்கள் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள ஒரு ஓட்டலில் பயங்கரவாதிகள் துப்பாக்கியுடன் புகுந்து அங்கிருந்த 153 பேரை பிணைய கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். அவர்களை மீட்க அந்நாட்டு ராணுவம் முயற்சித்து வந்தனர். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இது வரை 43 பேர் இறந்துள்ளனர்.

பிணைய கைதிகள் 4 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 13 மணி நேரத்துக்கும் மேலாக மீட்கும் பணி நடந்து வருகிறது.