டில்லி

ந்திய வெளியுறவுத்துறை கனடா தனது நற்பெயரைக் காத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி உள்ளது.

காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜர் கடந்த ஜூன் மாதம் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டதில் இந்திய அரசின் உளவாளிகளுக்குத் தொடர்பு இருப்பதாகப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கனடா அரசு கனடாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றி வந்த உயர் அதிகாரி பவன்குமார்ராய் என்பவரை நாட்டைவிட்டு வெளியேற்றியது. இந்திய அரசு இது தொடர்பாகக் கனடாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது மட்டும் இன்றி பதிலடியாகக் கனடா உயர் தூதரக அதிகாரியை நாட்டை விட்டே வெளியேற உத்தரவிட்டது.

இந்தியா கனடா வாழ் மக்களுக்கு விசா வழங்க இந்தியா இடைக்காலத் தடை விதித்துள்ளதானால் கனடா-இந்தியா இடையேயான உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தன பக்சி,

”கனடா அரசு இந்தியாவுக்கு எதிராகக் குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். கனடா அரசுக்கு கனடாவில் இருந்து குற்றச்செயலில் ஈடுபடுவோர் பற்றி ஆதாரம் அளித்தும் நடவடிக்கை இல்லை.  கனடா ஹர்தீப் சிங் நிஜார் வழக்கில் எந்த தகவல்களையும் இந்தியாவுக்கு வழங்கவில்லை. 

அங்குள்ள உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தல் காரணமாக விசா வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.  கனடா குற்றவாளிகளின் புகலிடமாகக் கனடா உள்ளது என்ற கெட்ட பெயர் ஏற்படாமல் கனடா அரசு செயல்பட வேண்டும். 

இந்தியத் தூதரகத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அந்நாட்டின் பொறுப்பாகும். இந்தியா மீது அரசியல் காரணங்களுக்காகக் கனடா குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது.” 

என்று தெரிவித்துள்ளார்..