சென்னை: சென்னையில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டுகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக, மருத்துவமனைக்கு வரும்  நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சுமார் 70 சதவிகித படுக்கைகள் நிரம்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில்  நேற்று மட்டும்  1306 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால்,  சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை  1,75,484 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை  3,318 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை 1,59,237 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போதைய நிலையில், 12,929 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் கொரோனா தொற்று பரவல் கடந்த மாதம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், கடந்த ஒரு வாரமாக தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தினசரி ஆயிரத்துக்கும் கீழே தொற்று பரவல் இருந்து வந்த நிலையில், கடந்த 10 நாட்களாக தொற்று பரவலின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. தற்போது, நாள் ஒன்றுக்கு 1200 முதல் 1300 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், மருத்துவமனைகளில் காலியாகி வந்த கொரோனா படுக்கைகள் மீண்டும் நிரம்பத் தொடங்கி உள்ளது.

சென்ன்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கோவிட் -19 நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட 1600 படுக்கைகளில், சுமார் 1200 படுக்கைகள் மீண்டும்  நிரம்பியுள்ளன. “அனுமதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் கடுமையான அறிகுறிகள் உள்ளன” என்று மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.

அதுபோல கீழ்ப்பாக்கம்  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், செப்டம்பர் கடைசி வாரத்திலிருந்து சேர்க்கைகளில் அதிகரிப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். “கோவிட் -19 நோயாளிகளுக்கான 500 படுக்கைகளில் 400 நிரம்பியுள்ளன. ஐ.சி.யுவில் பத்து படுக்கைகள் உள்ளன” என்று மருத்துவமனையின் டீன் டாக்டர் பி வசந்தமணி கூறினார்.

தெற்கு மற்றும் மத்திய சென்னையில் உள்ள இரண்டு முக்கிய அரசு மருத்துவமனைகளில் சுமார் 70 சதவீதம் கொரோனா படுக்கைகள் நிரம்பி உள்ளன, வடக்கு சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30 சதவீத படுக்கைகள் மட்டுமே உள்ளன. மருத்துவமனையின் துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கணேஷ் கூறுகையில், 1200 பேரில் 420 படுக்கைகள் மட்டுமே மருத்துவமனையில் உள்ளதாக தெரிவித்து உள்ளார். அதே வேளையில், மருத்துவமனையின் கீழ் உள்ள பராமரிப்பு மையங்களில் 450 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள ஓமந்தூரார் பல்நோக்கு  மருத்துவமனையில் சுமார் 60 சதவீத படுக்கைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் தொடக்கத்தில், தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தபோது, நோயாளிகளின் வருகை குறைந்த நிலையில், தற்போது மீண்டும்  அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

அதுபோல, கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் 56 தனியார் மருத்துவமனைகளிலும், 70 சதவிகிதம் தங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.  அரசாங்க தரவுகளின்படி, அப்பல்லோவின் கிரீம்ஸ் சாலை கிளையில் உள்ள அனைத்து 90 படுக்கைகளும் நிரம்பியுள்ளன, 81 அதன் வானகரம் கிளையில்  90 படுக்கைகளில் நிரம்பியுள்ளன. காவிரி மருத்துவமனையில், கிடைக்கக்கூடிய 75 படுக்கைகளும் நிரம்பியுள்ளன, MIOT, Gleneagles Global Health City, MGM Healthcare மற்றும் Medway மருத்துவமனைகள் அனைத்தும் 70 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட படுக்கைகள் நிரம்பி உள்ளன.

இவ்வாறு  தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.