பிரபல மலையாள பட தயாரிப்பாளர்களான ஆன்டனி பெரும்பாவூர், ஆண்டோ ஜோசப் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோரின் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

திரையரங்குகள் அனைத்தும் திறக்கப்பட்ட நிலையிலும் மலையாளத்தில் தயாராகி திரைக்கு வர காத்திருக்கும் 120 க்கும் மேற்பட்ட படங்களில் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் ஓ.டி.டி.யில் வெளியிடவே அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்.

சமீபத்தில் ஓ டி டி யில் வெளியான மலையாள படங்கள் 150 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டியதாக வெளியான தகவலையடுத்து ஓ.டி.டி.யில் வெளியாகும் திரைப்படங்களுக்கான வருமானம் குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

வருமான வரித்துறை அதிகாரிகளின் இந்த சோதனை தயாரிப்பாளர்களின் வீடுகளிலும் மேற்கொள்ளப்படுமா என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை.