டில்லி:

ஜெனிவா வங்கியில் கணக்கு வைத்துள்ள 50க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கருப்பு பணம் மீட்கப்படும் என்று கூறி வருகிறது. பணமதிப்பிழப்பு அறிவிப்பை தொடர்ந்து சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது.

இந்நிலையில், ஜெனிவா எச்.எஸ்.பி.சி. வங்கியில் கணக்கு வைத்துள்ள 50க்கும் மேற்பட்ட இந்தியர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த பட்டியலில் முழு விபரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.