சென்னை: முதலமைச்சர் முன்னிலையில் தமிழ்நாடு அரசு, மேக்சிவிஷன் ஐ ஹாஸ்பிடல்ஸ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

தமிழ்நாடு அரசு, மேக்சிவிஷன் ஐ ஹாஸ்பிடல்ஸ் நிறுவனம் இடையே முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம்  2,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், மேக்சிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிடல்ஸ் பிரைவேட் லிமிடெட் ரூ. 400 கோடி முதலீடு மற்றும் 2000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் நிலை 2 மற்றும் நிலை 3 நகரங்களில் 100 கண் சிகிச்சை மையங்கள் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசிற்கும், மேக்சிவிஷன் குழுமத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்  முதலமைச்சர்  முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.