சென்னை: தமிழ்நாட்டில், ஒரே மேடையில் ராகுல், ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என்றும், பிரியங்காவும் பிரசாரம் செய்ய வருகிறார் என  தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் தெரி​வித்​தார்.

தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 10ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல், புதுச்சேரி (ஜூன் 15), மேற்கு வங்காளம் (மே 7), அசாம் (மே 20), கேரளா (மே 23) ஆகிய மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடைகிறது. எனவே, இந்த 5 மாநிலங்களில் உள்ள 824 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்து தேர்தல்  தேதிகளை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் வன்முறை குறைவு என்பதால், எப்போதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வரும் 13ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் களம் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது தகதகவென தகித்துக் கொண்டி ருக்கிறது.

இந்த நிலையில், தமிழக காங்​கிரஸ் மேலிட பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர்  சென்னையில் செய்​தி​யாளர்​களை சந்தித்தார். அப்போது,  தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்கு ராகுல்​காந்தி மற்​றும் தெலங்​கா​னா, கர்​நாடகா முதல்​வர்​கள் வரவுள்​ளனர். தமி​ழ​கத்​தில் ராகுல்​காந்​தி​யின் தேர்​தல் பிரச்​சா​ரம் குறித்து சில தினங்​களில் அறிவிக்​கப்​படும் என்றவர், தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்ய பிரி​யங்கா காந்​தி​யும  வரு​கி​றார் என்றவர்,   ராகுல்​காந்​தி, மு.க.ஸ்​டா​லின் இணைந்து தேர்​தல் பிரச்​சா​ரம் செய்​வார்​கள் என்றும் கூறினார்.

புதுச்​சேரிக்கு ராகுல்​காந்தி வந்த போது, தமிழக முதல்​வ​ருக்கு தமி​ழ​கத்​தில் பொதுக்​கூட்​டம் இருந்​தது. அதே​நேரம் ராகுல்​காந்தி அவசர​மாக கேரள மாநில பிரச்​சா​ரத்​துக்கு செல்ல வேண்​டியதும் இருந்​தது. அதனால், புதுச்​சேரி​யில் இரு​வ​ரும் ஒன்​றாக தேர்​தல் பிரச்​சார பொதுக்​கூட்​டத்​தில் பங்​கேற்க முடிய​வில்​லை.

இவ்​வாறு கூறினார்.

[youtube-feed feed=1]