சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் 32 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது.

இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்

”வரும் 27 ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.  

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 32 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதாவது, அரியலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் , கடலூர் ,மயிலாடுதுறை , திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி , கரூர் , நாமக்கல் , சேலம் , தர்மபுரி , கிருஷ்ணகிரி , தேனி , திண்டுக்கல் , மதுரை, நெல்லை, தென்காசி,விருதுநகர் , ராமநாதபுரம், சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நீலகிரி , கோவை , திருப்பூர் ஆகிய 32 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது”

எனத் தெரிவித்துள்ளது.