சென்னை

மிழகத்தில்  அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

தமிழகத்தில் கோடைக் காலம் மார்ச் மாதம் இறுதியில் இருந்து ஆரம்பிக்கும். அதனால் கடந்த ஏப்ரல் மாதத் தில் கணிசமான வெயில் பதிவானது. மேலும் அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் காலமான மே மாதத்தில் உச்சக்கட்ட வெப்பம் பதிவானது.  மே 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம், மே 29 ம் தேதி வரை, அதாவது சித்திரை 21 துவங்கி வைகாசி 15 வரை அக்னி நட்சத்திரம் உள்ளது. இதனால் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தினம் தினம் மழை பெய்து வந்தது.  ஆனால் பல மாவட்டங்களில் கத்தரி வெயில் மக்களை வாடி வதைத்தது. இன்று சென்னை புறநகர்ப் பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்த நிலையில் காணப்படுவதால் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சென்னையில் பல்வேறு இடங்களில் இருள் மேகம் சூழ்ந்து உள்ளது. சென்னையில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.  புறநகர் பகுதியான ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

”நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல். தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது”

என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.