டோக்கியோ

ப்பான் நாட்டில் ஊழல் குற்றச்சாட்டுக் காரணமாக ஆளும் கட்சி அலுவலகங்களில் திடீரென நடந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன.

தற்போது ஜப்பானில் ஜனநாயக லிபரல் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் நன்கொடை நிதியை தங்களுடைய சொந்த காரணங்களுக்காகச் செலவு செய்வதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால் இது தொடர்பாக விசாரணை நடத்த ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உத்தரவிட்டார்.

இவ்வாறு நன்கொடை நிதியை ஊழல் செய்ததாகக்கூறி 4 அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். ஊழல் குற்றச்சாட்டு விசாரணை நேர்மையாக நடப்பதை உறுதி செய்யக் கட்சியின் தேசிய தலைவர் பதவியை புமியோ கிஷிடா ராஜினாமா செய்தார்.

திடீர் என ஜப்பானில் பல்வேறு இடங்களில் உள்ள ஜனநாயக லிபரல் கட்சிக்குச் சொந்தமான அலுவலகங்களில் அமலாக்கத்துறை, காவலர்களுடன் இணைந்து அரசு வழக்கறிஞர்கள் சோதனை மேற்கொண்டனர்.  பல முக்கிய ஆவணங்கள் இந்த சோதனையின் போது சிக்கியதாக தகவல்கள் கூறுகின்றன.