மணிகளை ஒலிப்பது குறித்த மணியான தகவல் !!
🔔மணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது.
🔔மெதுவாக அடித்தால் அர்க்யபாத்யதிகள் சமர்ப்பிக்கப் படுகிறது என்று அர்த்தம்.
🔔கணகணவென்று அடித்தால் தூபம், தீபம் ஆகிறது என்று அர்த்தம்.
🔔இரண்டு பக்கமும் விசேஷமாக அடித்தால் திருமஞ்சனம் நடக்கிறது என்று அர்த்தம்.
🔔மெதுவாக அடித்தால் பகவான் அமுது செய்கிறான் என்று அர்த்தம்.
🔔மணியின் தொனியை வைத்தே கோவிலில் என்ன நடக்கின்றது என்று தெரிந்து கொள்ளலாம்.
🔔மணி அடிப்பதை மகான்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
🔔மணியை வலது கையில் எடுத்து, இடது கையில் மாற்றிக்கொண்டு கற்பூர ஆரத்தித் தட்டை எடுக்க வேண்டும்.
🔔பிறகு இடது கையிலிருந்து வலது கைக்கு மாற்றிக் கொண்டு கீழே வைக்க வேண்டும்.
🔔இடது கையால் மணியை எடுக்கவே கூடாது.
🔔கண்டை என்பது சாமானியமல்ல. அதில் பிரணவம் த்வனிக்கிறது. தேவதைகளை
வரவழைக்கிறது. துஷ்ட ப்ரக்ருதிகளை ஓட்டுகிறது.
🔔பகவானுக்கு அமுது காணும்போது நிசப்தமாக இருக்க வேண்டும். அமங்கலமான பேச்சுகள் காதில் விழக்கூடாது. மணி அடித்தால் அவை காதில் விழாது.