டில்லி

நாளை அதாவது ஜூலை 1 முதல் வர உள்ள முக்கிய மாற்றங்கள் குறித்த ஒரு செய்தி இதோ

நாளை ஜூலை துவங்க உள்ள நிலையில், மக்களுடன் தொடர்புடைய சில நேரடி விஷயங்களில், அதிரடி மாற்றங்கள், நம் நாட்டில் நிகழப் போவதாகத் தெரிகிறது.. இத்தகைய  புதிய முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகின்றன

ஒவ்வொரு  மாதமும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அரசு எண்ணெய் நிறுவனங்களால் தொடர்ந்து திருத்தம் செய்யப்படுகிறது.. சென்ற முறை வர்த்தக எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டது… இம்முறை சிலிண்டர்களின் விலையில் பெரும் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது..

தற்போது சமையல் எரிவாயு விலையில் தொடர்ந்து எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் உள்ளதால் எண்ணெய் நிறுவனம், இது தொடர்பாக விலை  உயர்வு குறித்த முடிவை எடுக்கலாம் எனக் கூறப்படுகிறது.. எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்திவிட்டால், மத்திய அரசு தன் சார்பாக அந்த விலை உயர்வைக் குறைக்கவே செய்யும்..

இந்த முறை நிறையவே விலையைக் குறைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.. இதற்குக் காரணம், விரைவில் மக்களவை தேர்தல் நடக்கப் போகிறது என்பதால், மக்களுக்கு சில சலுகைகளைத் தர மத்திய அரசு திட்டம் வைத்திருக்கலாம்.. அல்லது சிலிண்டர் விலை குறைப்பையும் சர்ப்ரைஸாக அளிக்கலாம் என்று தெரிகிறது .

வெளிநாடுகளில் கிரெடிட் கார்டு செலவுகளுக்கு ஜூலை 1, 2023 ஆம் ஆண்டு முதல் சிஎஸ் கட்டணத்தை விதிக்கும் விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1, 2023 முதல் வெளிநாட்டில் உள்ள கிரெடிட் கார்டு செலவுகளுக்கு TCS கட்டணத்தை விதிக்கும் ஏற்பாடாக இருக்கலாம். எனவே, உங்கள் செலவு 7 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால், நீங்கள் 20 சதவீத டிசிஎஸ் செலுத்த வேண்டும்.

இக்கட்டணம் கல்வி மற்றும் மருத்துவம் தொடர்பான செலவினங்களில் 5 சதவீதமாகக் குறைக்கப்படும்.  ஆயினும் வெளிநாட்டில் கல்விக்காகக் கடன் பெற்ற வரி செலுத்துவோர் 7 லட்சத்துக்கும் அதிகமான தொகையில் 0.5 சதவீத டிசிஎஸ் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

இந்த ஆண்டுவருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு: வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை மாதம் நெருங்குகிறது. எனவே ஜூலை 31ம் தேதிக்குள் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும்.